சனி, 16 ஜனவரி, 2010

நாடாளுமன்றத்தில் திருமா!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர்தொல்.திருமாவளவன் அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக தமிழ் சமுக அரசியல் களப்பணி ஆற்றி வரும் ஒரு ஆற்றல்மிக்க இளைஞர்.

தமிழகத்தின் இளம் அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். பெரும்பாலான தலைவர்களால் பாராட்டு பெற்றவர். தான் அரசியல் பணியின் மூலம் ஏராளமான போராட்டங்களை நடத்தியவர்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் சாத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக போரடி பல வகையிலும் மக்கள் அமைதியாக வாழ துணை நின்றவர். அநீதிக்கெதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்தியவர்.

தமிழ் இன உணர்வாளர்கள் பலர் தேர்தல் கூட்டணி தயக்கங்களை மறந்து வாழ்த்தவேண்டும்.

பலர் நேரிலும்,தொலைபேசியிலும் வாழ்த்தியிருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தான் இன்னும் தானும் வாழ்த்தாமல் தன கட்சிக்காரர்களையும் வாழ்த்துவதற்கு வழிவிடாமல் இருக்கிறார். என்ன இருந்தாலும் திருமா என் இன்னொரு மகனை போன்றவர் என் வீட்டுக்கு எப்பொழுதும் வரலாம் போகலாம் என்றார்.

ஆனால் இன்று வரை வாய் திறவாமல் இருக்கிறார். அய்யா! இது தான் தாங்கள் என் போன்ற அடுத்த தலைமுறைக்கு காட்டும் வழியா? பாடமா? புரியவில்லை! பாமக விடம் மாற்றம் வேண்டும் என் போன்ற தமிழர்கள் எதிர்பார்க்கிறோம்.

கலவர மாவட்டமாக இருந்த வடக்கு மாவட்டங்களில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் இணக்கமான சூழ்நிலை எப்படி கலவரத்திற்கு முடிவுரை எழுதியதோ, அதே போன்று இன்றைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இணைந்து செயலாற்றினால் அது தமிழகத்தின் பொன்னேடுகளில் பொரிக்கப்பெரும்

ஏனென்றால்,
இன்றைய நிலையில் பாராளுமன்றத்தில் இன உணர்வோடு ஈழ தமிழரின் அவல நிலை குறித்து பேச வேண்டும் என்றால் தோழர் மட்டும் தான் உண்டு அதில் மாற்றுகருத்து இருக்க வாய்ப்பில்லை. எந்த தடுமாற்றமும், எந்த வகையான நிர்பந்தமும் இல்லாதவர். அதே நேரத்தில் இனம் பாதிக்கப்படும் துயரமான இந்த கால கட்டத்தில் துணிச்சலாக டெல்லிக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருகிறார்.

இது தான் இன்றைய தேவை. காலம் அறிந்து செய்யப்படும் தோழரின் நல்ல முயற்சிக்கு அனைவரும் துணைநிற்போம். அப்படி துணை நிற்பதை கடமையாய் கொள்வோம். வாருங்கள் தமிழின சொந்தங்களே.........!
Posted by Picasa

கருத்துகள் இல்லை: