வியாழன், 21 ஜனவரி, 2010

வீர வணக்கம்!!!








முத்துகுமரன் எனும் முத்தமிழின் சொத்து - நீ

முடங்களின் முகத்தில் காரி உமிழ்ந்தவன் நீ!

இனம் சாகும் போது சினம்கொண்டேழுந்தவன் - நீ

இருட்டு தேசத்தை புரட்டி போட்டவன் நீ!

புறநானூற்றின் புது வாரிசும் நீ!


உயிரால் உரையெழுதி உலகின் செவியில் ஓங்கி அறைந்தவனே

இன்றும், என்றும் உன் நினைவோடு ..........!


பொற்கோ








புதன், 20 ஜனவரி, 2010

ஆசை!


கவிதை எழுதிட ஆசை - அதில் நீ

கருவாக இருந்திட ஆசை!

கனவு காணவும் ஆசை - உன்போல்

நனவாய் மாறவும் ஆசை!

காற்றில் கலந்திட ஆசை - கள

மூர்க்கம் கற்றிட ஆசை!

பொதிகை மேல் நின்று - தமிழ்

பறை ஒலிக்க ஆசை!

தமிழ் கொடி ஏற்றி - நம்மோர்

நெஞ்சில் விதைக்க ஆசை!

எதிரியோடு மோதும் - களம்

கண்டு வர ஆசை!

தளையறுப்பான் கையில் - ஒரு

முத்தமிடவும் ஆசை!



ஆக்கம்

பொற்கோ