செவ்வாய், 16 மார்ச், 2010

மத மாற்றமும், பெரியார் தாசனும் .....!?

"மதம் " என்பது "அபின்" போன்றது என்று கம்யூனிச தந்தை காரல் மார்க்ஸ் முதல் பல்வேறு அறிஞர் பெருமக்களும் இதுமாதிரியான சூழ்நிலைகளில் கூறிவந்துள்ளனர்.உலகம் முழுவதும் பெருவாரியான மக்கள் ஏதாவது ஒரு மதத்தை பின் பற்றியே வருகின்றனர்.

உலகம் முழுவதும் மதமாற்றம் நடைபெற்று வந்தாலும், தமிழ் நாட்டில் மதம் மாற்றம் ஒரு கவனத்தை பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணியாக இருப்பது ஊடகங்கள் தான். ஏனென்றால், இங்கு செயல்படும் ஊடக நிறுவனங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு மதத்தை பின்பற்றுவோரால் நடத்தப்படுபவை.

இவர்களின் சொந்த கருத்துக்களே மக்களின் கருத்தாக நிலைநிறுத்த தங்களின் பேனாக்களில் "மை" நிறப்புகிறவர்கள். யார் என்ன சொன்னாலும் அது குறித்து கவலை கொள்ளாதவர்கள்.

சரி அது கிடக்கட்டும். தமிழ் நாடு முழுவதும் பெரியாரியல் பரப்புனர்களில் குறிப்பிடத்தக்கவர். அடிக்கடி மதம் மாறும் அவருடைய செயலுக்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளள தேவையில்லை. ஆனால் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் முதலில் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். என்பது பரவலாக எல்லோராலும் முன் வைக்கப்படும் கருத்து.

ஒரு முறை ஒரு கருத்தரங்கில் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகள் என்னை புத்த மதம் குறித்து ஆய்வு செய்ய வைத்தது. அதன் விளைவாக நான் இப்பொழுது என் பெயரை "சித்தார்த்தன்" என்று மாற்றிவிட்டேன் என்றார்.

நமக்கு ஒரு வசதி இருக்கிறது என்பதற்காக அதனை தாறுமாறாக பயன்படுத்தகூடாது.
இத்தனை நாளும் நல்ல மனிதனாக இருப்பது ஒன்று தான் மனிதனுக்கு சிறப்பு என்று பேசிய வாயால் "இன்சா அல்லாஹ்" என்று சொல்லி விடுவதன் மூலம் என்ன மாற்றம் வந்து விடும் என்று நினைக்கிறாரோ?

தன் மதமாற்றம் குறித்து அவர் அறிவித்துள்ள செய்தியை படித்த போது சிரிப்பு தான் வந்தது. காரணம் பேராசிரியர் இனியும் எந்த மத ஆராய்ச்சி நூல்களையும் ஆய்வு செய்யாத படிக்கு கவனித்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் மேலும் பல மத நிறுவனங்கள் வாசல்களை திறந்து வைத்துள்ளன........!

2 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

//பேராசிரியர் இனியும் எந்த மத ஆராய்ச்சி நூல்களையும் ஆய்வு செய்யாத படிக்கு கவனித்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில் மேலும் பல மத நிறுவனங்கள் வாசல்களை திறந்து வைத்துள்ளன........!//

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான்...

அமுதாயினி... சொன்னது…

ஒரு மனிதனுக்கு எந்த மதக்கொள்கை பிடித்திருக்கிறதோ அந்த மதத்தை பின்பற்றுவதற்கு
முழு உரிமை உள்ளது நம் இந்தியாவில், ஆகவே மதம் மாறியது ஒன்றும் மிகப்பெரிய தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை!